Saturday, 8 August 2015

                  பாரதி தமிழ்ச்சங்க
தமிழ் நாடு கலை இலக்கிய பெருமன்றம் தேவகோட்டை கிளை

55ஆண்டு மகாகவி பாரதி விழா போட்டிகள் அறிவிப்பு

அன்புடையீர்,
                                 வணக்கம் . பெருமன்றத்தின் சார்பில் இவ்வாண்டு நடைபெற உள்ள மகாகவி பாரதி விழாவினை முன்னிட்டுப் போட்டிகள் அறிவிக்க பெறுகின்றன. தலைமை ஆசிரியர்களும், ஆசிரிய பெருமக்களும், பெற்றோர்களும் வழக்கம்போல மாணவர்களுக்கு ஆதரவு நல்கி போட்டிகளிலும், விழா நிகழ்ச்சிகளையும் சிறப்புற செய்ய வேண்டும் என கேட்டு கொள்கின்றோம்.

 நாள்   : 09.08.2015 ஞாயிறு காலை 9மணி                                                           
 இடம்: குழந்தை ஏசு தொடக்க பள்ளி,சரஸ்வதி வாசகசாலை தெரு,                      தேவகோட்டை


01 ஓவிய போட்டி (காலை 9.00மணி)
 ஓவிய போட்டியில் L K G, U K G 1,2,3,4,5 ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். போட்டியில் ஒரு படத்தை பார்த்து வரைய வேண்டும், தாள்கள் வழங்கபடும். பென்சில்,ரப்பர்,அட்டை முதலிய பொருள்கள் மாணவர்களே கொண்டு வரவேண்டும், வண்ண பென்சில் பயன்படுத்தகூடாது, பென்சிலால் மட்டுமே வரைய வேண்டும்.

02 ஒப்புவித்தல் போட்டி (காலை 10.00 மணி)
 ஒப்பிவித்தல் போட்டியில் 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம்.
மாணவர்கள் பிழையின்றிமெய்ப்பாடு” ( நாடக பாணி) தோன்ற ஒப்பிவிக்க வேண்டும்

03.கட்டுரை போட்டி(காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை)
 கட்டுரை போட்டியில் 9,10ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். மூன்று பக்கங்களுக்கு மிகாமல்  கட்டுரை எழுத வேண்டும். தாள்கள் வழங்கபடும்.
தலைப்பு  “ அண்ணல் அம்பேத்கரின் அளப்பரிய ஆற்றல்

04.கவிதை போட்டி(காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை)
 கவிதை போட்டியில் 11,12ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். முப்பது வரிகளுக்கு மிகாமல்  கவிதை எழுத வேண்டும். தாள்கள் வழங்கபடும்.
தலைப்பு  “ அன்பு தருவதிலே

05.இசை போட்டி (காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை)
 பாரதியாரின் ஏதாவது ஒரு பாடலை 3 நிமிடங்களுக்கு மிகாமல் ராக பாவத்துடன் பாட வேண்டும். இப்போட்டியில் பொதுமக்களும் பங்கேற்கலாம்.

06.பேச்சு போட்டி (காலை 11.00 மணி முதல்)
 கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம், ஏழு நிமிடங்கள் பேச வேண்டும்.
தலைப்பு:”தமிழக பள்ளிகளில் தமிழ் மொழியே பாட மொழியும் , பயிற்று மொழியும்”

கவனத்திற்குரிய விதிமுறைகள்

போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு வகுப்பிற்கும் , முதலாம், இரண்டாம், மற்றும் மூன்றாம் பரிசு என மூன்று பரிசுகள் வழங்கபடும், மேலும் முதல் மூன்று இடங்களை பெறாத ,போட்டியில் கலந்து கொண்ட ஒவ்வொரு பள்ளியை சேர்ந்த சம்மந்தபட்ட வகுப்புகளில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கபட்டு, சிறப்பு பரிசு வழங்கபடும். நடுவரின் தீர்ப்பே இறுதியானது. போட்டியாளர்கள் தங்கள் நிறுவனங்களிலிருந்து சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும்.

இவண்,
பாரதி தமிழ் சங்க தமிழ் நாடு கலை இலக்கிய பெருமன்றம், தேவகோட்டை



No comments:

Post a Comment