Friday, 11 September 2015

பாரதி நினைவு நாள்
செப்டம்பர் 11
பாரதி நினைவு நாள்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்னல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் அறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்,
பரிதி முன் பணியே போல
நண்ணீய நின் முன் இங்கு
நசிந்திடல் வேண்டும் அண்ணாய்

ஏ பாரதி
முண்டாசுக் கவியே
காகிதம் செய்யச் சொன்னாய்
ஆயுதம் செய்யச் சொன்னாய்

நீ பாடிய தமிழ மண்ணில்
ஒரு நிமிடத்திற்கு 3 கார்கள்
உற்பத்தியாகப் போகிறதாம்

கம்பும், கேழ்வரகும்,
சாமையும் காணாமல்
போய்விட்டன.

மூண்று மாதம் முழுமையாய்ப் பாடுபட்டாலும் நெல்மணிகள் என்ணவோ விளைவதில்லை.

தண்ணீர் மற்றும் உணவு தவிர
எதற்கும் இங்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலை மாற இனி நீ பிறந்து வா
உன் கவியால சொரணை உருவாக்கு

Wednesday, 9 September 2015

பாரதி தமிழ் சங்க தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  தேவகோட்டை கிளை  “55ஆம் ஆண்டு மகாகவி பாரதி விழாவைமுன்னிட்டு 09.08.2015 அன்று குழந்தை ஏசு தொடக்கபள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டி , ஒப்புவித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, இசைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் பெருந்திரளாக கலந்து கொண்ட அனைத்து பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கும், அவர்களுக்கு கலந்து கொள்ள அனுமதி அளித்த பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள், போட்டிகளில் பரிசு வென்றவர்களின் விவரம் இதோ உங்களின்  பார்வைக்காக, வெற்றி பெற்றவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள், வெற்றியை தவற விட்டவர்கள் அடுத்த வருட போட்டிகளில் வெல்ல வாழ்த்துக்கள்

ஓவிய போட்டி L K G
முதல் பரிசு
செல்வி.S.கனிஷ்கா ஸ்ரீ, ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி
இரண்டாம் பரிசு
செல்வி.B.ஜாஸ்மின், N S M V P S தொடக்க பள்ளி
மூன்றாம் பரிசு
செல்வன் விக்னேஷ்வரன், வைரம் மெட்ரிகுலேசன் பள்ளி சிறப்பு பரிசு
செல்வன் R சங்கயன்,  பாரத் பப்ளிக் பள்ளி.
செல்வன் S கவிராஜன், சர்ச் பள்ளி.
செல்வன் S சந்தோஷ், புளூ டால்பின் பள்ளி.
செல்வி K கோகுல வர்ஷினி, யாதவா நர்சரி பள்ளி.
          A ஜாய்லினோரா, செயிண்ட் ஜோசப் பள்ளி .
செல்வன் M.வருண், லோட்டஸ் பள்ளி.
செல்வன் M.மனோஜ், கேத்தரின் பள்ளி.
செல்வி S ஹரிஸ்தா ஸ்ரீ, குழந்தை ஏசு தொடக்கபள்ளி.
செல்வன் S அஜய்குமார், பஞ்சு வள்ளியப்பா மெட்ரிகுலேசன் பள்ளி.

ஓவிய போட்டி U K G
முதல் பரிசு
செல்வன்.T.கிஷோர்குமார், ஸ்ரீ சாரத வித்யாலயா பள்ளி
இரண்டாம் பரிசு
செல்வி.S. நாரிதா, குழந்தை ஏசு தொடக்க பள்ளி
மூன்றாம் பரிசு
செல்வி.A.அஸ்னா, லோட்டஸ் பள்ளி

சிறப்பு பரிசு
செல்வன் கவின், சி எஸ் ஐ சர்ச் பள்ளி.
செல்வன் ஆதினன், புளூ டால்பின் பள்ளி.
செல்வி S ஆர்திகா என்.எஸ்.எம்.வி.பி.எஸ் தொடக்கபள்ளி.
செல்வன் மோகன் பாலா, வைரம் மெட்ரிக் பள்ளி.
செல்வி தர்ஷ்னா பஞ்சு வள்ளியப்பா பள்ளி .
செல்வன் B.ஹரிஹரன், தாளாம்பாள் பள்ளி.
செல்வன் சாய்தீபன், ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை பள்ளி.
செல்வி G  நந்தினி, பாரத் பப்ளிக் பள்ளி.
செல்வன் குழந்தை ரூபிணா, செயிண்ட் மேரிஸ் பள்ளி. செல்வன் R.தீபன் சக்ரவர்த்தி, செயிண்ட் மேரிஸ் பள்ளி.
செல்வி A.ருத்ரா ஸ்வாதி, யாதவா பள்ளி.
செல்வன் P.கிஷோர் கேத்தரின் பள்ளி.


அன்பார்ந்த பெற்றோர்களே, தவறு செய்வது மனிதனின் இயல்பு, மன்னிப்பது மாமனிதர்களின் இயல்பு, சொற்பிழை இருப்பின் மன்னித்து 9443166468 என்ற எண்ணிற்கு தெரிவித்தால் பிழைகள் நீக்கபடும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம் நன்றி  (தொடரும்)

அன்பார்ந்த ஆன்றோர்களே, சான்றோர்களே,
                  கடந்த மாதம் 09.08.2015 அன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சிறுவர் சிறுமியர்களுக்கான, பட்டியல் நாளை அதாவது 10.09.2015 அன்று வெளியிடபடுகின்றது என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவித்து கொள்கின்றோம்
             
                                                       

Friday, 4 September 2015

அன்பார்ந்த  தமிழ் ஆர்வலர்களே கடந்த 29.08.2015 அன்று தமிழ் நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்ட மா நாடு பற்றிய சில பதிவுகள் உங்களுக்காக இதோ

















Saturday, 29 August 2015


                                             
                

தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் 

சிவகங்கை மாவட்டம் 

மாவட்ட மாநாடு 

29/08/2015 - சனிக்கிழமை - காலை 10 மணி 

கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம் 

காரைக்குடி.

தலைமை: நாவலாசிரியர்.சந்திரகாந்தன் 

வரவேற்புரை: தோழர்.வெ.மாரி - NFTE 

கவியரங்கம்  - கருத்தரங்கம் - கலையரங்கம் 

வாழ்த்தரங்கம் - பாராட்டரங்கம் - பட்டிமன்றம் 

பங்கேற்பு : தோழர்கள் 

பொன்னீலன்
 
பரிணாமன் 

இரா.காமராசு 

த.ச.நடராஜன் 

குணசேகரன்-MLA 

முனைவர் பாண்டி 

பழ.  இராமச்சந்திரன் 

முனைவர் மு.சு.கண்மணி

கம்பன் கழகம் பழனியப்பன் 

தமுஎச சங்கரசுப்பிரமணியன் 

முனைவர் பழனி இராகுலதாசன் 

திருக்குறள் பேரவை ஜெயங்கொண்டான் 

மற்றும்  கலை இலக்கியச்சான்றோர்கள்....

தோழர்களே... வருக...

Saturday, 15 August 2015

தாயின் மணிக்கொடி பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்
தாயுமானவர் ஆனந்தக்களிப்பு மெட்டு

பல்லவி

தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

சரணங்கள்

1.

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன்
      உச்சியின் மேல்‘வந்தே மாதரம்’என்றே
பாங்கின் எழுதித் திகழும்-செய்ய
      பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!
(தாயின்)

2.

பட்டுத் துகிலென லாமோ?-அதில்
      பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகந்தடித் தாலும்-அதை
      மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்
(தாயின்)

3.

இந்திரன் வச்சிரம் ஓர்பால்-அதில்
      எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்,-(தாய்)
மந்திரம் நடுவுறத் தோன்றும்-அதன்
      மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?
(தாயின்)

4.

கம்பத்தின் கீழ்நிற் றல்காணீர்-எங்கும்
      காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியர்அவ் வீரர்;-தங்கள்
      நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்
(தாயின்)

5.

அணியணி யாயவர் நிற்கும்-இந்த
      ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும்-விறல்
      பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்!
(தாயின்)

6.

செந்தமிழ் நாட்டுப் பொருநர்,-கொடுந்
      தீக்கண் மறவர்கள், சேரன்தன் வீரர்,
சிந்தை துணிந்த தெலுங்கர்,-தாயின்
      சேவடிக் கேபணி செய்திடு துளுவர்.
(தாயின்)

7.

கன்னடர் ஒட்டிய ரோடு-போரில்
      காலனும் அஞ்சக் கலக்கு மராட்டர்,
பொன்னகர்த் தேவர்க ளொப்ப-நிற்கும்
      பொற்புடை யார்இந்துஸ் தானத்து மல்லர்.
(தாயின்)

8.

பூதலம் முற்றிடும் வரையும்-அறப்
      போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்,
      மாதர்கள் கற்புள்ள வரையும்-பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்
(தாயின்)

9.

பஞ்ச நதத்துப் பிறந்தோர்-முன்னைப்
      பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும் தாயின்-பதத்
      தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும்.
(தாயின்)

10.

சேர்ந்ததைக் காப்பது காணீர்!-அவர்
      சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத-நிலத்
      தேவி துவஜம் சிறப்புற வாழ்க!
(தாயின்)

அனைவருக்கும்  

இனிய 69வது 

சுதந்திரதின வாழ்த்துக்கள்