Sunday, 20 September 2015



























மேலும் சில காட்சிகள் உங்களுக்காக

55ஆம் ஆண்டு  மகாகவி பாரதி விழா இன்று (20.09.2015)காலை முதல் சற்று முன் வரை(பிற்பகல்4 மணிவரை)













Wednesday, 16 September 2015



 போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவகண்மணிகளும், ஆன்றோர்களும், சான்றோர்களும், பொதுமக்களும் இன்தமிழ் சுவை பருக வருக வருக வருக  நன்றி வணக்கம்

Friday, 11 September 2015

பாரதி நினைவு நாள்
செப்டம்பர் 11
பாரதி நினைவு நாள்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்னல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் அறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்,
பரிதி முன் பணியே போல
நண்ணீய நின் முன் இங்கு
நசிந்திடல் வேண்டும் அண்ணாய்

ஏ பாரதி
முண்டாசுக் கவியே
காகிதம் செய்யச் சொன்னாய்
ஆயுதம் செய்யச் சொன்னாய்

நீ பாடிய தமிழ மண்ணில்
ஒரு நிமிடத்திற்கு 3 கார்கள்
உற்பத்தியாகப் போகிறதாம்

கம்பும், கேழ்வரகும்,
சாமையும் காணாமல்
போய்விட்டன.

மூண்று மாதம் முழுமையாய்ப் பாடுபட்டாலும் நெல்மணிகள் என்ணவோ விளைவதில்லை.

தண்ணீர் மற்றும் உணவு தவிர
எதற்கும் இங்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலை மாற இனி நீ பிறந்து வா
உன் கவியால சொரணை உருவாக்கு

Wednesday, 9 September 2015

பாரதி தமிழ் சங்க தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  தேவகோட்டை கிளை  “55ஆம் ஆண்டு மகாகவி பாரதி விழாவைமுன்னிட்டு 09.08.2015 அன்று குழந்தை ஏசு தொடக்கபள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டி , ஒப்புவித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, இசைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் பெருந்திரளாக கலந்து கொண்ட அனைத்து பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கும், அவர்களுக்கு கலந்து கொள்ள அனுமதி அளித்த பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள், போட்டிகளில் பரிசு வென்றவர்களின் விவரம் இதோ உங்களின்  பார்வைக்காக, வெற்றி பெற்றவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள், வெற்றியை தவற விட்டவர்கள் அடுத்த வருட போட்டிகளில் வெல்ல வாழ்த்துக்கள்

ஓவிய போட்டி L K G
முதல் பரிசு
செல்வி.S.கனிஷ்கா ஸ்ரீ, ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி
இரண்டாம் பரிசு
செல்வி.B.ஜாஸ்மின், N S M V P S தொடக்க பள்ளி
மூன்றாம் பரிசு
செல்வன் விக்னேஷ்வரன், வைரம் மெட்ரிகுலேசன் பள்ளி சிறப்பு பரிசு
செல்வன் R சங்கயன்,  பாரத் பப்ளிக் பள்ளி.
செல்வன் S கவிராஜன், சர்ச் பள்ளி.
செல்வன் S சந்தோஷ், புளூ டால்பின் பள்ளி.
செல்வி K கோகுல வர்ஷினி, யாதவா நர்சரி பள்ளி.
          A ஜாய்லினோரா, செயிண்ட் ஜோசப் பள்ளி .
செல்வன் M.வருண், லோட்டஸ் பள்ளி.
செல்வன் M.மனோஜ், கேத்தரின் பள்ளி.
செல்வி S ஹரிஸ்தா ஸ்ரீ, குழந்தை ஏசு தொடக்கபள்ளி.
செல்வன் S அஜய்குமார், பஞ்சு வள்ளியப்பா மெட்ரிகுலேசன் பள்ளி.

ஓவிய போட்டி U K G
முதல் பரிசு
செல்வன்.T.கிஷோர்குமார், ஸ்ரீ சாரத வித்யாலயா பள்ளி
இரண்டாம் பரிசு
செல்வி.S. நாரிதா, குழந்தை ஏசு தொடக்க பள்ளி
மூன்றாம் பரிசு
செல்வி.A.அஸ்னா, லோட்டஸ் பள்ளி

சிறப்பு பரிசு
செல்வன் கவின், சி எஸ் ஐ சர்ச் பள்ளி.
செல்வன் ஆதினன், புளூ டால்பின் பள்ளி.
செல்வி S ஆர்திகா என்.எஸ்.எம்.வி.பி.எஸ் தொடக்கபள்ளி.
செல்வன் மோகன் பாலா, வைரம் மெட்ரிக் பள்ளி.
செல்வி தர்ஷ்னா பஞ்சு வள்ளியப்பா பள்ளி .
செல்வன் B.ஹரிஹரன், தாளாம்பாள் பள்ளி.
செல்வன் சாய்தீபன், ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை பள்ளி.
செல்வி G  நந்தினி, பாரத் பப்ளிக் பள்ளி.
செல்வன் குழந்தை ரூபிணா, செயிண்ட் மேரிஸ் பள்ளி. செல்வன் R.தீபன் சக்ரவர்த்தி, செயிண்ட் மேரிஸ் பள்ளி.
செல்வி A.ருத்ரா ஸ்வாதி, யாதவா பள்ளி.
செல்வன் P.கிஷோர் கேத்தரின் பள்ளி.


அன்பார்ந்த பெற்றோர்களே, தவறு செய்வது மனிதனின் இயல்பு, மன்னிப்பது மாமனிதர்களின் இயல்பு, சொற்பிழை இருப்பின் மன்னித்து 9443166468 என்ற எண்ணிற்கு தெரிவித்தால் பிழைகள் நீக்கபடும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம் நன்றி  (தொடரும்)

அன்பார்ந்த ஆன்றோர்களே, சான்றோர்களே,
                  கடந்த மாதம் 09.08.2015 அன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சிறுவர் சிறுமியர்களுக்கான, பட்டியல் நாளை அதாவது 10.09.2015 அன்று வெளியிடபடுகின்றது என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவித்து கொள்கின்றோம்
             
                                                       

Friday, 4 September 2015

அன்பார்ந்த  தமிழ் ஆர்வலர்களே கடந்த 29.08.2015 அன்று தமிழ் நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்ட மா நாடு பற்றிய சில பதிவுகள் உங்களுக்காக இதோ